திங்கள்சந்தை, ஜன. 26: இரணியல் அருகே வில்லுக்குறி குதிரைப்பந்திவிளையை சேர்ந்தவர் ஜாண் ரோஸ் (40). எலக்ட்ரீசியன். அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், இவர் நேற்று மாலை அப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பீஸ் கட்ட ஏறியதாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் உடல் கரிந்த நிலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் காயம் appeared first on Dinakaran.