சென்னை: சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள், ஸ்பேனர் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மெயின் லைனில் இருந்து லூப் லைன் மாறும் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் ஸ்பேனர் கிடந்தன. இன்று காலை கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் வழக்கம் போல தண்டவாள ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். மெயின் லைனிலிருந்து லூப் லைன் மாறும் இடத்தில் கற்கள் மற்றும் இரும்பு ஸ்பேனர் கிடந்ததை அப்புறப்படுத்தினர்.
The post திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள், ஸ்பேனர் கிடந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.