ஓசூர், பிப்.5: ஓசூர் ஒன்றியம், பலவனப்பள்ளி ஊராட்சி மாவத்தூர் கிராமத்தில், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, சுமார் ₹3.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணற்றுக்கான மின்மோட்டார், பைப்லைன், பேனல் போர்டு, கேபிள் வயர் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் நாகேஷ், ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ், காரப்பள்ளி சீனிவாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமரேசன், விஜயா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
The post மின் மோட்டார், பேனல் போர்டு திறப்பு appeared first on Dinakaran.