மாநில அரசின் சாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்காது: அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து

3 months ago 9

புதுக்கோட்டை: மாநில அரசு எடுக்கும் சாதிவாரி கணக்கெடுப்புக்கு சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைக்காது. பிற மாநிலங்களில் கணக்கெடுப்பு நடத்தியிருந்தாலும் நடைமுறைக்கு வரவில்லை. எனவேதான், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறோம் என்று மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திமுக அறிவாலயத்தில் உள்ள செங்கல்லைக் கூட தொடவோ, அறிவாலயத்துக்குள் நுழையவோ பாஜக தலைவர் அண்ணாமலையால் முடியாது. பொதுவான குற்றச் சம்பவங்களை தடுக்க முடியாது. ஆனால், குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வருகிறோம்.

Read Entire Article