மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்: சிசிடிவி காட்சிகள் வைரலால் கைது

3 months ago 13

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் தனியார் பள்ளியில், கடந்த 23ம் தேதி, மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடந்தது. இதில் ஓசூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்று விளையாடினர். இதில் ஓசூர் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனர். அந்த நேரத்தில், ஆசிரியரின் கைக்கடிகாரத்தை, மாணவி ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த பள்ளி ஆசிரியை, மாணவியையும், பயிற்சியாளரையும் கடுமையாக திட்டி உள்ளார். பயிற்சியாளர் புதிய கைக்கடிகாரத்தை வாங்கிக் கொடுத்து விடுகிறேன் என கூறியுள்ளார்.

ஆனால், சமாதானம் ஆகாத ஆசிரியை, தொடர்ந்து மாணவியை திட்டியுள்ளார். பயிற்சியாளர் மாணவியின் தாயிடம் போன் செய்து கூறியுள்ளார். அவரது தாயார் மாணவிக்கு அடி கொடுங்க என கூறியுள்ளார். இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் அந்த மாணவியை தாக்கியுள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மைதானத்தில் கீழே கிடந்த கைக்கடிகாரத்தை மாணவி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவியை அடித்த உடற்கல்வி ஆசிரியரை, ஓசூர் தனியார் பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிந்து ஆசிரியர் தியாகராஜனை (34) நேற்று கைது செய்தனர்.

The post மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர்: சிசிடிவி காட்சிகள் வைரலால் கைது appeared first on Dinakaran.

Read Entire Article