மதுரை: முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தாமதம் ஆனதால், அதன் திட்ட மதிப்பீடு ரூ.313 கோடி உயர்ந்துள்ளது. இன்னும் பணிகள் நிறைவடையாததால் வரும் மார்ச் மாதத்தில் திட்டமிட்டபடி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பாரா அல்லது தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் வரை மழைக்காலத்தை தவிர மற்ற காலங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. கடந்த சில ஆண்டாக, போதிய மழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை ஓரளவு குறைந்துள்ளது. ஆனால், வைகை-1, வைகை-2, காவிரி கூட்டுக் குடிநீர் திட்டங்களில் இருந்து போதுமான குடிநீர் கிடைக்காததால் கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.1,295.76 கோடியில் முல்லைப்பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது திமுக ஆட்சியில் இன்னும் இந்த திட்டம் முடிக்கப்படவில்லை.