பொத்தேரி: எஸ்ஆர்எம் தமிழ் பேராயம் நடத்திய சொல் தமிழா சொல் 2025 பேச்சுப்போட்டியில் வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, சமூக வலைதளங்களில் பேசுவதைவிட மாணவர்கள் பொதுவெளியில் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக பேச வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பேச்சுத் திறன்மிக்க மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் உயரிய நோக்குடன் அனைத்து மாவட்டங்களும் 9 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன. சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நெல்லை, கோவை, சேலம் ஆகிய 9 மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று முடிந்தது.