விசேஷ நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை சரிவு

5 hours ago 4

அண்ணா நகர், மே 20: கோயம்பேடு மார்க் கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது . இந்நிலையில், விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு பூ மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிந்து காணப்பட்டது. குறிப்பாக, ஒரு கிலோ மல்லி ரூ.450லிருந்து ரூ.300க்கும், ஐஸ்மல்லி ரூ.360லிருந்து ரூ.250க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.300லிருந்து ரூ.150க்கும், கனகாம்பரம் ரூ.600லிருந்து ரூ.200க்கும், அரளி பூ ரூ.200லிருந்து ரூ.150க்கும், சாமந்தி ரூ.140லிருந்து ரூ.80க்கும், சம்பங்கி ரூ.100லிருந்து ரூ.60க்கும், பன்னீர் ரோஸ் ரூ.70லிருந்து ரூ.20க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120லிருந்து ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் தொடங்கும் போது மீண்டும் அனைத்து பூக்களின் விலை படிப்படியாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post விசேஷ நாட்கள் இல்லாததால் பூக்கள் விலை சரிவு appeared first on Dinakaran.

Read Entire Article