மாணவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது

3 months ago 11

சேலம், பிப்.8: சேலம் தாதகாப்பட்டி பெருமாள் புதுதெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி(19). கல்லூரி மாணவர். இவர் நேற்று அவரது டூவீலரில் தாதகாபட்டி பகுதியில் சென்றபோது பெரியகொல்லப்பட்டியை சேர்ந்த கோகுல்(31) என்பவர், தன் மீது மோதுவது போல ஏன் வந்தாய்? என கேட்டு தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில், பார்த்தசாரதியை தாக்கி கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, கோகுலை கைது செய்துள்ளனர்.

The post மாணவர் மீது தாக்குதல்; வாலிபர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article