மழைக்கால தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஜி.கே.வாசன் கோரிக்கை

3 months ago 15

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கை: மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டால் பெரும் பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். அரசின் முக்கியத் துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். எனவே தமிழக அரசு, மழைக்காலத்தில் சென்னை மற்றும் தென் மாவட்டப் பகுதிகள் என மாநிலத்தில் எங்கு மழை பெய்தாலும் மக்களை, விவசாயத்தை, கால்நடைகளை பாதுகாக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி, மக்களுக்கு துணை நிற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மழைக்கால தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article