மருத்துவர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு: மருத்துவ சங்கங்களிடம் தமிழக அரசு உறுதி

2 months ago 13

சென்னை: “மருத்துவ சங்கங்கள் அதிகபட்சமாக கேட்ட பாதுகாப்பு தொடர்புடைய நடவடிக்கைகள் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்திருக்கிறோம். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படும். அதுதொடர்பாக மருத்துவ சங்கங்கள் அறிவிக்கும்,” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் மருத்துவ சங்கங்கள் உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற ஓர் இளைஞர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியாற்றிக் கொண்டிருந்த புற்றுநோயியல் மருத்துவர் பாலாஜியை தாக்கியுள்ளார். விக்னேஷ் மறைத்து கொண்டு வந்திருந்த சிறு கத்தியின் மூலம் மருத்துவருக்கு 7 இடங்களில் காயங்களை ஏற்படுத்தியிருக்கிறார். விக்னேஷைப் பிடித்தவர்கள் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Entire Article