மயிலாடுதுறை, பிப்.24: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 27ம் தேதி நடைபெறுகிறது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2025 பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் மகாபாரதி தலைமையில் வருகிற 27ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை, நீர்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண்மை பொறியியல்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தோட்டக்கலை துறை ஆகிய துறைகளில் விவசாயம் தொடர்புடைய கருத்துகளை தெரிவிக்கலாம் என மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி, தெரிவித்துள்ளார்.
The post மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் 27ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.