மத்திய மந்திரி அமித்ஷா இன்று கோவை வருகை; 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

3 hours ago 1

கோவை

கோவை பீளமேடு பகுதியில் பா.ஜனதா அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய மந்திரி அமித்ஷா கோவை வர உள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 9 மணியளவில் கோவை வருகிறார். பின்னர் அவர் கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி ஓய்வு எடுக்கிறார். நாளை (புதன்கிழமை) காலையில் பா.ஜனதா கட்சி அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்று புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதைத்தொடர்ந்து அவர், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த கூட்டம் முடிந்ததும் சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு, மாலை ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் சிவராத்திரி விழாவில் அவர் பங்கேற்கிறார். இதற்காக நாளை மாலை 4 மணியளவில் நட்சத்திர விடுதியில் இருந்து கார் மூலம் கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து அவர், ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் செல்கிறார்.இதையடுத்து அவர் அங்குள்ள தியான லிங்கம் இருக்கும் இடத்துக்கு சென்று லிங்க பைரவியை வழிபடுகிறார். சிவராத்திரி விழா நடைபெறும் ஆதியோகி சிலை இருக்கும் இடத்துக்கு கார் மூலம் செல்கிறார்.

அங்கு நடைபெறும் சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்ததும் அமித்ஷா ஈஷா மையத்தில் தங்கி ஓய்வு எடுக்கிறார். மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கோவை விமான நிலையத்துக்கு சென்று தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

Read Entire Article