மத்திய அரசு வேலை: 3,134 காலி பணியிடங்கள் - எஸ்.எஸ்.சி வெளியிட்ட அறிவிப்பு

12 hours ago 1

புதுடெல்லி,

மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையமான எஸ்.எஸ்.சி, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள 3,134 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள் விவரம் :

லோயர் டிவிஷன் கிளர்க் (LDC),

ஜூனியர் செகரட்டரியேட் அசிஸ்ஸ்ட்ண்ட்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்

டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு ஏ

ஆகிய பிரிவுகளில் 3,134 காலி பணியிடங்கள்

கல்வி தகுதி : டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணித பாடப்பிரிவு எடுத்து படித்து இருப்பது அவசியம். எல்.டிசி பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்.

வயது வரம்பு : 18 வயது நிரம்பியவர்களும் 27 வயது பூர்த்தி அடையாதவர்களும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்

சம்பளம் : பணிக்கு தகுந்தபடி மாறுபடும், அதிகபட்சமாக ரூ. 29,200 - 92,300/ வரை

விண்னப்பிக்க கடைசி நாள் : 18.07.2025

விண்ணப்ப கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : கணிணி வழியில் இரண்டு கட்ட தேர்வு நடைபெறும்:

தேர்வு அறிவிப்பினை படிக்க : https://ssc.gov.in/

Read Entire Article