சென்னை: மத்திய அரசின் நிதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்படுவதால், திட்டங்களின் பயன்கள் மக்களுக்கு சென்றடைவதில் தாமதமாகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனை செயல்படுத்தவும் அமைக்கப்பட்டுள்ள மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் (திஷா) 4-வது ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஐ.பெரியாசாமி, மா.சுப்பிரமணியன் மற்றும் கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக), துரை வைகோ (மதிமுக), திருமாவளவன் (விசிக) மற்றும் காங்கிரஸ், திமுக எம்எல்ஏக்கள், தலைமைச்செயலர் நா.முருகானந்தம் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.