திருச்சி, பிப்.25: திருச்சி மாவட்ட ரங்கம் தாலுகா கிளிகூடு பகுதியை சேர்ந்த ராஜா(38) என்பவர் குறைதீர் முகாமின்போது கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அவர் அளித்த மனுவில், எனக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு ரங்கம் தாலுகா கிளிகூடு கிராமத்தில் நடந்த கொலை வழக்கில் தன்னுடைய பெயரும் இருந்தது. அதன் தொடர்ச்சியாக போலீசார் தன்மீது தொடர்ந்து பொய் வழக்கு பதிவு செய்து வருகின்றனர். இதில் 4 வழக்குககளில் விடுதலை ஆன நிலையிலும், ஒரு பொய் வழக்கு மட்டும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் வழக்கு போடுவதற்கு என்னை விசாரணைக்காக அழைக்கிறார்கள். நான் எந்த குற்ற செயல்களிலும் ஈடுபடுவதில்லை. எனவே நான் விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ள எனக்கு வங்கி கடன் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
The post திருந்தி வாழும் தனக்கு வங்கி கடன் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.