மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணி..!!

4 months ago 14

மதுரை: மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணி நடத்தி வருகின்றனர். முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபயண பேரணி நடைபெற்று வருகிறது. விவசாயிகள், வணிகர்கள் இணைந்து மேலூர் அருகே நடைபயணத்தை தொடங்குகின்றனர். நரசிங்கம்பட்டியில் இருந்து நடைபயணத்தை தொடங்கி தல்லாகுளத்தில் நிறைவு செய்கின்றனர். அனுமதியின்றி போராட்டம் நடைபெறுவதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நடைபயணம் முடிந்ததும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபடவுள்ளனர்.

The post மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி விவசாயிகள் பேரணி..!! appeared first on Dinakaran.

Read Entire Article