மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்

2 months ago 12

மதுரை: மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகராட்சி எல்லைக்குள் மூன்று சென்ட் இடம் மற்றும் வீடு கட்டி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை நிலம் மற்றும் வீடுகளை வழங்க மாட்டோம் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நிலம் எடுக்க அதிகாரிகள் இன்று வர உள்ள நிலையில் நீர்த்தேக்கத் தொட்டி மீது ஏறி நின்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சின்ன உடைப்பு கிராமத்தில் அதிகாலை முதலே ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலம் எடுக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சின்ன உடைப்பு கிராமத்தில் வஜ்ரா வாகனம், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளது.

The post மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article