மதுரை: திமுக முன்னாள் மண்டல தலைவர் வி.கே.குருசாமி மீதான வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடன் கொடுக்கல், வாங்கல் தொடர்பான புகாரில் வி.கே.குருசாமி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக கடந்தாண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல முடிவு செய்து இருப்பதால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அரசு தரப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மனுதாரர்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது
The post மதுரை வி.கே.குருசாமி மீதான வழக்கு ரத்து appeared first on Dinakaran.