மண்டபம் அருகே சமூக நல்லிணக்க கந்தூரி விழா

3 months ago 12

மண்டபம்,பிப்.10: மண்டபம் அருகே வேதாளை கிராமத்தில் மஹான் காட்டானை சேகு அப்துல் காதிர் தர்ஹாவில் 410ம் ஆண்டு சமூக நல்லிணக்கம் கந்தூரி விழா நடைபெற்றது. மண்டபம் அருகேயுள்ள வேதாளை தெற்கு தெருவில் மஹான் காட்டானை சேகு அப்துல் காதிர் ஒலியுல்லாஹ் தர்ஹா அமைந்துள்ளது. இந்த தர்ஹாவில் 410ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த ஜனவரி 30ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து பத்து நாட்களாக தர்ஹாவில் இரவில் மௌவ்லீது ஓதப்பட்டு சிறப்பு தொழுகை கூட்டம் நடைபெற்று வந்தது. விழாவின் பத்தாவது நாளான நேற்று இரவு மஹான் காட்டானை சேகு அப்துல் காதிர் தர்ஹாவில் மவ்லீது ஓதப்பட்டு கந்தூரி விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தெற்கு தெரு ஜமாத் தலைவர் முஜிபுர் ரஹ்மான், ஜமாத்தார்கள் மற்றும் தர்ஹா கமிட்டியாளர்கள் செய்திருந்தனர். விழாவில் வேதாளை ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த அனைத்து பொதுமக்களும் சமூக நல்லிணக்கத்துடன் கலந்து கொண்டனர்.

The post மண்டபம் அருகே சமூக நல்லிணக்க கந்தூரி விழா appeared first on Dinakaran.

Read Entire Article