மண் கடத்திய லாரி பறிமுதல்

3 hours ago 1

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரி அருகே, சூலமலை கிராம நிர்வாக அலுவலர் வரதராஜ், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, கிருஷ்ணகிரி- திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் பெரியபனமுட்டுலு கிராமத்தில் ரோந்து சென்ற போது, அங்கு கேட்பாரற்று நின்ற டிப்பர் லாரியில் சோதனை நடத்தினர். அதில் 3 யூனிட் மண் கடத்தி வந்திருப்பது தெரிந்தது. இதையடுத்து, அந்த லாரியை பறிமுதல் செய்து, அதனை கந்திகுப்பம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியின் டிரைவர் மற்றும் உரிமையாளர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மண் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article