கன்னியாகுமரி,பிப்.7: கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜ் மற்றும் ஆயுர்வேத மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி டி.எஸ்.பி. மகேஷ் குமார் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, சப்.இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் மற்றும் போலீசார் லாட்ஜ் மற்றும் ஆயுர்வேத மசாஜ் சென்ட்ரலில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ஒரு மசாஜ் சென்டரில் 2 பெண்களை வைத்து விபசாரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுபோல ஒரு லாட்ஜில் பெண்களை வைத்து விபசாரம் செய்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து லாட்ஜின் உரிமையாளர் மற்றும் மேலாளர், புரோக்கர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பெண்கள் மூவரையும் போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
The post மசாஜ் சென்டரில் விபசாரம் 3 பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.