திருச்சி,ஜன.21: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் 318 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, ஆக்கிரமிப்பு அகற்ற கோரியது, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், பட்டா மாறுதல் மற்றும் நிலத் தொடர்பான மனுக்கள் 98, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடா்பான மனுக்கள் 64, கலைஞா் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள் 22, குடும்ப அட்டை தொடர்பான மனுக்கள் 8, முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை, விபத்து நிவாரணத்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை மற்றும் நலிந்தோர் நலத்திட்ட உதவித்தொகைகள் பெறுவது தொடா்பான மனுக்கள் 29,
தெருவிளக்கு, தண்ணீர் இணைப்பு குழாய், பஸ் வசதி, தொகுப்பு வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டுவது தொடா்பான மனுக்கள் 18, புகார் தொடர்பான மனுக்கள் 4,கல்வி உதவித்தொகை, வங்கி கடன் இதர கடன் வசதிகள் கோாிய மனுக்கள் 5, இலவச தையல் இயந்திரம், இரண்டு பெண் குழந்தைகள் திட்டம்,சலவைப்பெட்டி வேண்டி விண்ணப்ப மனுக்கள் 8, மேலும் ஓய்வூதிய பயன், தொழிலாளா் நல வாரியம் தொடா்பான மனுக்கள், வேலை வாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் 3, நில ஆக்கிரமிப்பு தொடர்பான மனுக்கள் 5, வேலை வாய்ப்பு கோரிக்கை 19, மருத்துவம் மற்றும் இதர பணி தொடர்பாக 3, இதர மனுக்கள் 32 என மொத்தம் 318மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில் அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
The post மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் appeared first on Dinakaran.