மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு

7 hours ago 3

கெங்கவல்லி, ஜூலை 6: வீரகனூர் அருகே, நாவலூர் பெரியகாடு பகுதியில் உள்ள தனியார் விவசாய தோட்டத்தில், தென்னை மற்றும் வேப்ப மரத்தில் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன. நேற்று காலை கூட்டிலிருந்து வெளியேறிய விஷ வண்டுகள், அந்த வழியாக சென்றவர்களை துரத்தி துரத்தி கடித்தன. இதில், 5 பேர் காயமடைந்தனர். இதுகுறித்த தகவலின்பேரில், கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர்(பொ) செல்லப்பாண்டியன் மற்றும் வீரர்கள் விரைந்து சென்று மருந்து கலந்த தண்ணீரை பீய்ச்சி அடித்து, விஷ வண்டுகளை அழித்தனர். இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

The post மக்களை அச்சுறுத்திய விஷ வண்டுகள் அழிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article