போலீசாருக்கு இடமாறுதல் கவுன்சிலிங்

2 months ago 7

 

சிவகங்கை, டிச.3: சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 165 போலீசாருக்கு, நேற்று இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் காவல்நிலையம் 5 உட்பட 49 காவல்நிலையங்கள், மாவட்ட அளவில் டிசிபி, டிசிஆர்பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். தேர்தல்களையொட்டி போலீசாரை இடமாறுதல் செய்வது வழக்கம்.

இந்நிலையில் ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் 3 ஆண்டுக்கு மேல் ஏராளமான போலீசார் பணியாற்றி வந்தனர். இதையடுத்து போலீசார் முதல் ஏட்டு, எஸ்எஸ்ஐ வரை 3 ஆண்டுக்கு மேல் ஒரே காவல்நிலையத்தில் பணியாற்றுபவர்களுக்கு நேற்று சிவகங்கை எஸ்பி அலுவலகத்தில் இடமாறுதல் கவுன்சிலிங் நடைபெற்றது. இதில் சீனியாரிட்டி அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்பட்டு பணிமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது.

The post போலீசாருக்கு இடமாறுதல் கவுன்சிலிங் appeared first on Dinakaran.

Read Entire Article