தக்கலை, நவ.23: தக்கலை வட்டாரத்துக்குட்பட்ட கொல்லன்விளை, கல்லுவிளை, வாகவிளை, திருவிதாங்கோடு ஆகிய இடங்களில் உள்ள பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்ததால் அவர்கள் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் பிரவின் மற்றும் திருவிதாங்கோடு, முளகுமூடு பேரூராட்சி செயல் அலுவலர்கள், போலீசார் முன்னிலையில் 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
The post போதை பொருட்கள் விற்பனை 7 கடைகளுக்கு சீல் appeared first on Dinakaran.