வேலூர், பிப்.7: வேலூர் அடுத்த அரியூர் விஸ்வநாத நகரை சேர்ந்தவர் செந்தில்குமார்(47). கட்டிட மேஸ்திரி. இவர் ஒரு வீட்டில் 23 வயது இளம்பெண் தனியாக இருப்பதை அறிந்து, கொண்டு அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்து, வீட்டிற்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர். இதைப்பார்த்த செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அரியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
The post இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேஸ்திரி கைது appeared first on Dinakaran.