போடி அருகே சூதாடிய 6 பேர் கைது

1 week ago 2

போடி, ஏப்.9: போடி அருகே உள்ள பகுதிகளில் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். ராசிங்காபுரம் பகுதியில் கண்காணித்த போது, ஒரு தோட்டத்தின் அருகே பணம் வைத்து சூதாடிய அதே ஊரைச் சேர்ந்த கோபி (49), பாலமுருகன் (50), சுருளி (56) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்த பணம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர். அதேபோல் மற்றொரு பகுதியில் பணம் வைத்து சீட்டாட்டத்தில் ஈடுபட்ட பெருமாள் (55), சுரேஷ் (45), ராமராஜ் (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்த சீட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

The post போடி அருகே சூதாடிய 6 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article