“பொறுத்தது போதுமடா, பொங்கி எழ வந்துள்ளேன்!” - செல்லூர் ராஜூ பேச்சால் மதுரை மாநகராட்சி கூட்டத்தில் சலசலப்பு

3 hours ago 2

மதுரை: “பொறுத்தது போதுமடா, பொங்கி எழுவதற்கு வந்துள்ளேன்,” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மதுரை மாநகராட்சி கூட்டத்தில் கூறிய பின் திமுக கவுன்சிலர்கள் கூச்சலிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், “நான் இன்று இந்த கூட்டத்துக்கு வந்தது, ஊர் சேர்ந்து நானும் தேர் இழுக்க வந்துள்ளேன். அரசியல் பேச வரவில்லை. சமீப நாட்களாக மாநகராட்சியை பற்றி வருகிற செய்திகளை பார்த்து பொறுத்தது போதுமடா பொங்கி எழு என்ற மனோகரா படம் வசனம் அடிப்படையில் வந்துள்ளேன். நான் பார்த்த அனுபவங்கள், கேள்விப்பட்டவற்றை சொல்கிறேன். கொஞ்சம் நேரம் பேசலாமா?” என்றார்.

Read Entire Article