பைக்குகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள்

2 days ago 3

 

திருத்தணி: திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகரைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் மகன் சத்யா (36). அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகள் புவனேஸ்வரி (32). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் தங்களின் வீடுகளுக்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தனர். இந்நிலையில், வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். மோட்டார் சைக்கிள்கள் தீப்பற்றி எரிவதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக தீயை அணைத்தனர்.

இதில், 2 மோட்டார் சைக்கிள்களும் தீயில் கருகி நாசமானது. இதுகுறித்து, திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.நள்ளிரவில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பைக்குகளை தீ வைத்து எரித்த மர்ம நபர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article