சிவகங்கை,பிப்.10:பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என இளம் பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த நபர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த 25 வயது பெண்ணின் வாட்ஸ்சப் காலில் கடந்த மாதம் ஒருவர் பேசியுள்ளார்.
நிறுவன பங்குகளில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் கிடைக்கும் என்று பேசியுள்ளார். இதை நம்பிய அப்பெண் அந்த நபர் கூறிய வங்கி கணக்குகளில் ரூ.15 லட்சத்து 12 ஆயிரம் செலுத்தியுள்ளார். பின்னர் அந்த நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து அந்த பெண், சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
The post பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி appeared first on Dinakaran.