பூந்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலில் புதிய தேர் பணி: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கினார்

18 hours ago 3

பூந்தமல்லி: பூந்தமல்லியில் வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று ரூ.69 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்கும் பணி மற்றும் ரூ.53 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணிகளுக்கு ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

பூந்தமல்லியில் வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் நேற்று ரூ.69 லட்சம் மதிப்பில் புதிய திருத்தேர் அமைக்கும் பணி மற்றும் ரூ.53 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு மதில்சுவர் அமைக்கும் திருப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அனிதா தலைமை தாங்கினார். திருவள்ளூர் உதவி ஆணையர் சிவஞானம் வரவேற்றார். செயல் அலுவலர்கள் பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் லதா, சிறுவாபுரி முருகன் கோயில் மாதவன், அறங்காவலர் குழு தலைவர் பாபு, அறங்காவலர்கள் டாக்டர் என்.ஆர்.வெங்கடேசன், பி.கோபிநாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ரூ.69 லட்சம் மதிப்பில் புதிய திருத்தேர் அமைக்கும் பணி மற்றும் ரூ.53 லட்சம் மதிப்பில் பாதுகாப்பு மதில்சுவர் அமைக்கும் திருப்பணிகளுக்கு பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். இதில் பூந்தமல்லி நகர திமுக செயலாளர் ஜி.ஆர்.திருமலை, நகரமன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், துணைத் தலைவர் ஸ்ரீதர், அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பூந்தமல்லியில் வரதராஜ பெருமாள் கோயிலில் புதிய தேர் பணி: ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ துவக்கினார் appeared first on Dinakaran.

Read Entire Article