விழுப்புரம்: புறவாசல் வழியாக 3 கார்கள் மாறி, பதுங்கி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தவர் எடப்பாடி பழனிசாமி என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று (மே 22ம் தேதி) மாலை நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை வகித்தார். வேளாண்மைத் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.