சென்னை: புயல் நிவாரண நிதியாக முதலமைச்சரிடம் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விசிக எம்.எல்.ஏ.க்கள் 4பேர், எம்.பி.க்கள் 2 பேர் நிவாரண நிதி வழங்கி உள்ளனர். அதன்பின் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது; ரூ.2475 கோடி புயல் நிவாரணம் வழங்க ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. வழக்கம்போல் ஒன்றிய அரசு ரூ.944 கோடி மட்டும் கொடுத்து வஞ்சித்துவிட்டது. கட்சித் தலைமையின் அறிவுறுத்தலை மீறி தொடர்ச்சியாக ஆதவ் அர்ஜுனா எதிர்மறையாக செயல்பட்டு வருகிறார். விசிக தலைமை நிர்வாகக் குழுவில் ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க தீர்மானம் கொண்டுவந்தது என திருமாவளவன் கூறினார்.
The post புயல் நிவாரண நிதியாக முதலமைச்சரிடம் ரூ.10 லட்சம் வழங்கியுள்ளோம்: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.