திருச்சி: சரிவில் இருந்த தமிழகத்தை மீட்டு நம்பர்-1 மாநிலமாக்கி சாதனை படைத்துள்ளோம். இது வெறும் தொடக்கம்தான், திராவிட மாடல் ஆட்சியின் வெர்சன் 2.0 இனி சிங்கப் பாதையாக இருக்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408 கோடியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ.1,032.15 கோடி மதிப்பிலான 7,122 முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, ரூ.527.63 கோடி மதிப்பிலான 3,597 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின், ரூ.856 கோடியில் 1,17,132 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: