புகையிலையுடன் 10 பேர் கைது

3 months ago 19

 

மதுரையின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் அதிரடியாக சம்பந்தப்பட்ட கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது விளக்குத்தூண் பகுதியில் ஒரே கடையில் மட்டும் 10 கிலோ புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோல் தெற்கு வாசலில் உள்ள கடை ஒன்றில் ஒரு கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் பல்வேறு கடைகளில் சோதனை நடத்தி மொத்தம் 10 பேரை கைது செய்தனர்.

The post புகையிலையுடன் 10 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article