“திருப்பரங்குன்றத்தில் அயோத்தி யுத்தம்...” - பழங்காநத்தம் ஆர்ப்பாட்டத்தில் ஹெச்.ராஜா பேச்சு

2 hours ago 1

மதுரை: “தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் இந்து மக்களுக்கு எதிரான நிர்வாகம் நடைபெறுகிறது” என திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை பழங்காநத்தத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றம்சாட்டினார்.

திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க கோரி மதுரை பழங்காநத்தத்தில் இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை மாலை நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாநிலச் செயலாளர் சேவகன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோட்டச் செயலாளர் அரசப்பாண்டியன் வரவேற்றார். இதில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பேசியது: “தமிழகத்தில் இருக்கும் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தாலிபான் அரசுக்கும், இந்து விரோத தீய அரசுக்கும் சொல்கிறேன், இப்படித்தான் உத்தரப் பிரசேதத்திலும் நடைபெற்றது. அதனால் உத்தரப் பிரசேத்தில் எதிரிகள் ஆட்சிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Read Entire Article