சென்னை: வக்பு சட்ட திருத்தத்தில் ஏராளமான பிழைகள் இருப்பதால், இந்த சட்ட திருத்தம் செல்லாது என உச்ச நீதிமன்றம் நிச்சயம் அறிவிக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நேற்று கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: