பிளஸ்2 மாணவி மாயம்்; போலீசில் தந்தை புகார்

1 week ago 3

தர்மபுரி, பிப்.14: தர்மபுரி ஒட்டப்பட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி, தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன், சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் சிறுமி தனது தம்பியுடன் இருந்தார். மதியம் சுமார் 3 மணியளவில், சிறுவன் தனது தந்தைக்கு போன் செய்து அக்காவை காணவில்லை என கூறியுள்ளான். அதன் பேரில், வீட்டுக்கு வந்த தந்தை, மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுபற்றி அதியமான்கோட்டை போலீசில் அவர் நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, மாணவியை தேடி வருகின்றனர்.

The post பிளஸ்2 மாணவி மாயம்்; போலீசில் தந்தை புகார் appeared first on Dinakaran.

Read Entire Article