பிற்பகல் 1 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு..?

2 months ago 9

சென்னை,

கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடைந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.

இதனால் இன்று மாலையில் இருந்து தமிழ்நாட்டில் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக நாளை, நாளை மறுதினம் மற்றும் 28-ந்தேதி (வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் கடலூர் முதல் டெல்டா வரை கன முதல் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களின் கடல் பகுதிகளில் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் பிற்பகல் 1 மணி வரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மதியம் 1 மணிக்குள்ளாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Read Entire Article