
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப், செக் குடியரசின் மேரி பௌஸ்கோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகோ காப் 6-1, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் மேரி பௌஸ்கோவாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை மறுநாள் நடைபெறும் 4வது சுற்று ஆட்டத்தில் கோகோ காப், ரஷியாவின் எகடெரினா அலெக்ஸாண்ட்ரோவா உடன் மோத உள்ளார்.