பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்: நாடு முழுவதும் இரங்கல்

2 hours ago 2

மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டாடா குழுமத் தலைவராக 21 ஆண்டுகள் பதவி வகித்த அவர், KLIVE 2012-ல் ஓய்வு பெற்றார். 1996-ல் டாடா டெலி சர்வீஸ் என்ற நிறுவனத்தை ரத்தன் டாடா முதன்முதலில் நிறுவினார். இந்தியாவின் மோட்டார் வாகனத் தொழில் துறையில் மாபெரும் மாற்றம் ஏற்படுத்தியவர் ரத்தன் டாடா.

கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரண பணிகளுக்காக ரூ.1,500 கோடி வழங்கினார் ரத்தன் டாடா. 1937-ல் மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, தனது 10 வயதில் இருந்து பாட்டியிடம் வளர்ந்தார். 1959-ல் அமெரிக்காவில் கட்டடக் கலை படிப்பை முடித்துவிட்டு, டாடா குழுமத்தில் பணியாற்றத் தொடங்கினார். படிப்படியாக அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு முன்னேறி, 1991-ல் டாடா சன்ஸ் நிறுவனத் தலைவரானார். 21 ஆண்டு தலைமையில், நிறுவனத்தின் வருவாயை 40 -மடங்குகளும், லாபத்தை 50 மடங்குகளும் பெருக்கினார்.

1998-ல் டாடா இண்டிகா தொடங்கி, ரூ.1 லட்சத்திற்கு நானோ கார், ஜாகுவார் லேண்ட் ரோவர் வரை முக்கியப் பங்கு உள்ளது. 2012-ல் 75 வயதில் டாடா சன்ஸ் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா; 2016-17-ல் இடைக்காலத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் கௌரவத் தலைவராக, இறுதி மூச்சு வரை ஆலோசனைகள் வழங்கினார். பத்ம விபூஷண், பத்ம பூஷண் விருதுகளை ரத்தன் டாடாவுக்கு வழங்கி ஒன்றிய அரசு கவுரவித்துள்ளது.

ரத்தன் டாடா மறைவிற்கு தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உ.பி., மேற்குவங்கம், ஆந்திரா உள்பட பல்வேறு மாநில முதலமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறையினர், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ரத்தன் டாடாவின் உடலுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும் என மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்துள்ளார். மும்பையில் உள்ள N.C.P.A.மையத்தில் பொதுமக்களின் – அஞ்சலிக்காக ரத்தன் டாடா உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது

குடியரசுத் தலைவர் இரங்கல்
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்; ரத்தன் டாடா அனுபவமிக்க தொழில் வல்லுநர்கள் மற்றும் இளம் மாணவர்களை ஊக்கப்படுத்தினார். ரத்தன் டாடா ஆற்றிய தொண்டு மற்றும் சேவை ஆகியவற்றில் அவரது பங்களிப்பு விலைமதிப்பற்றது. ரத்தன் டாடா குடும்பத்தினருக்கும், டாடா குழுமத்தின் ஒட்டுமொத்த குழுவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்: நாடு முழுவதும் இரங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article