திருப்புவனம்: 'பிரதமர் குறித்த கேலி சித்திரம் நாட்டுக்கே அவமானம்' என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திருப்புவனத்தில் தமாகா தொண்டரனி சார்பில் நடைபெற்ற வடமஞ்சுவிரட்டில் பங்கேற்க வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. தொடர்ந்து வரும் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கடமை தமிழக அரசுக்கு உள்ளது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க போதைப்பொருட்கள் பயன்பாடும், மதுக்கடைகளுமே காரணம். மதுக்கடைகளை குறைக்க முடியாத அரசாக திமுக அரசு உள்ளது.