சென்னை: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மத்திய அரசின் பங்கு நிதியை உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த திஷா கூட்டத்தில் விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
வளர்ச்சி, ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழுவின் (திஷா) மாநில அளவிலான ஆய்வு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. மத்திய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற எம்.பி.க்கள், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: