செய்யாறு: பணக்கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கு தேர்தல் வியூகம் தேவைப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் பகுதியில் 2022-ல் நடந்த கூட்டத்தில் அவதூறாகப் பேசியது தொடர்பாக பிரம்மதேசம் காவல் நிலையத்தில் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பாக்கியராஜ் முன்னிலையில் சீமான் நேற்று ஆஜரானார். இவ்வழக்கை வரும் மார்ச் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.