மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகரத்தில் பல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் உள்ளது. இந்து முன்னனி அமைப்பினர் போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கு, 144 தடை உத்தரவை திரும்ப பெறகோரி வழக்கு, இந்து அமைப்பினரை கைது செய்ய கூடாது, பக்தகர்களை கோயிலுக்கு சாமி கும்பிட அனுமதிக்க வேண்டும் என கோரிய வழக்கு என பல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் ஜெயசந்திரன், பூர்ணிமா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதிகள் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த இடம் கேட்கிறார்கள். ஆனால் பி.3, 4 தேதிகளில் 144 தடை உத்தரவு இருக்கிறது. எனவே எந்த இடத்தில், எந்த தேதியில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படும் என மதுரை மாநகர காவல்துறையிடம் விளக்கம் பெற்று தெரிவிக்கும்படி தமிழ்நாடு அரசு வழக்கறிஞரை வலியுறுத்தினார்.
The post பிப்.3,4 தேதிகளில் 144 தடை உத்தரவு உள்ள நிலையில், ஆர்ப்பட்டத்திற்கு வேறு எந்த நாளில் அனுமதி வழங்குவீர்கள்..? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி appeared first on Dinakaran.