பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இஓஎஸ்-09 அதிநவீன செயற்கைக் கோள் இன்று அதிகாலை விண்ணில் பாய்கிறது

9 hours ago 3

புவி கண்காணிப்புக்காக இஸ்ரோ உருவாக்கியுள்ள இஓஎஸ்-09 செயற்கைக் கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படுகிறது.

விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தொலைஉணர்வு பயன்பாட்டுக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் என பல்வேறு செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக இஸ்ரோ வடிவமைத்துள்ள இஓஎஸ்-09 (ரிசாட்-1பி) எனும் அதிநவீன ரேடார் செயற்கைக் கோள், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி61 ராக்கெட் மூலம் இன்று அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது.

Read Entire Article