பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் பார் காவலாளி வீட்டில் பதுக்கிய ரூ.1.20 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

2 weeks ago 2

பாவூர்சத்திரம்,ஜன.23: பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் பார் காவலாளி சட்டத்திற்கு விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான 940 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூரில் இயங்கி வரும் அரசு டாஸ்மாக் கடையை ஒட்டி செயல்பட்டு வந்த பாரில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் கீழப்பாவூர் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த சமுத்திரபாண்டியன் மகன் தங்கசாமி (40). இவர் தனது வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து சட்டத்திற்கு புறம்பாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாவூர்சத்திரம் எஸ்.ஐ. உமாமகேஸ்வரி தலைமையிலான போலீசார், தங்கசாமியின் வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 940 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். பின்னர் மது பாட்டில்களை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்ற போலீசார், தங்கசாமி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களின் மதிப்பு ரூ.1.20 லட்சம் என தெரியவந்துள்ளது.

The post பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக் பார் காவலாளி வீட்டில் பதுக்கிய ரூ.1.20 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article