
பார்சிலோனா,
பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினின் பார்சிலோனா நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த 12ம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 20ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் (ரவுண்ட் ஆப் 16) ஒன்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினா (ஸ்பெயின்) உடன் மோதினார்.
இந்த போட்டியில் எளிதில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட ரூப்லெவ், 5-7, 4-6 என்ற செட் கணக்கில் அலெஜான்ட்ரோ டேவிடோவிச் போகினாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.