பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

2 hours ago 1

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். கங்கலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வனப்பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் இந்த மோதல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்ட் நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூடு நடந்தது. மேற்கு பஸ்தார் பிரிவு கேடரைச் சேர்ந்த மாவோயிஸ்டுகள் அப்பகுதியில் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, மாவட்ட ரிசர்வ் காவலர், மாநில காவல்துறையின் சிறப்புப் பணிக்குழு, சிஆர்பிஎஃப் மற்றும் கோப்ரா பிரிவு ஆகியவற்றைக் கொண்ட குழு தேடுதலைத் தொடங்கியதாக மூத்த பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தாக்கினர். பதிலுக்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இருதரப்பினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் தீவிர வேட்டை நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பாதுகாப்புப் படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 8 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Read Entire Article